Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
>
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சுமார் 2200 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை சிங்களர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறியுள்ளார். இத்தகைய ஆக்கிரமிப்பால் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கும், மாவட்ட அரசு அதிகாரிக்கும் பா. அரியநேத்திரன் கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பில் உள்ள 2200 ஏக்கருக்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை  என அழைக்கப்படும் மண்முனை தென் மேற்கு பகுதி செயலாளர் பிரிவு மற்றும் மண்முனை மேற்கு பகுதி செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட காத்தாடியார் சேனை (575 ஏக்கர்) தாளையடி மடு (585 ஏக்கர்) கெவிலியாமடு (583 ஏக்கர்) பெருவட்டை (500 ஏக்கர்) ஆகிய பிரதேசங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக பிரகடனம் செய்து நில அளவைப் படத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  படுவான்கரை,  மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதி.   இங்குள்ள நிலப்பரப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி விவசாய நிலங்களாகும். இவற்றில் நெல் சாகுபடியும்,  கால்நடை வளர்ப்பும் முக்கியமாக இருக்கின்றனர். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு பால் உற்பத்தியும் இடம்பெறுகின்றது.  இந்த நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் ராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதால் விவசாயிகள் குறிப்பாக கால்நடை வளர்ப்போர்  பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்களின் கால்நடைகளை அவர்கள் எங்கு கொண்டு செல்வது? எப்படி அவைகளைப் பராமரிப்பது? நகர்ப்புறங்களிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் பெருந்தொகையான கால்நடைகளை வளர்க்கலாமா? இந்த கால்நடைகளுக்கு யார் உணவு கொடுப்பது? என அவர் கேள்வி எழுப்புவதுடன். இது சம்பந்தமாக  ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றையும் தான் இன்று அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   14 பேர் இன்று : 1731 நேற்று: 2465 மொத்தம்: 9486243
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்