Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils
தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன், இவர் மெட்ராஸ் பாண்டியன் என்ற பெயரில் சென்னையிலும் ரவுடித்தொழிலில் கொடி கட்டி பறந்ததால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. தனிப்படை காவல்துறையினர் இரண்டு முறை சுற்றிவளைத்த போதும் திண்டுக்கல் பாண்டியன் தப்பிவிட்டார். இந்த நிலையில் நீலாங்கரைப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

காரில் தப்ப முயன்ற திண்டுக்கல் பாண்டியனை காவல்துறையினர் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி கும்பல் நடத்திய எதிர்தாக்குதலில் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர்.  இந்த மோதலில் திண்டுக்கல் பாண்டியன், அவரது கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலு ஆகியோர் சுட்டுக்கொல்லப்ட்டனர். இருவரும் ஏராளமான கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு துறையானாலும் அந்ததுறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு நண்பர்களும் எதிரிகளும் உருவாவது வாடிக்கை என்று கூறியுள்ளார். தூக்கி நிறுத்துவோர்கள், தூக்கியும் போடுவார்கள் இதனால் மற்றவர்களைப்பற்றி அவர்கள் கோள் மூட்டும்போதெல்லாம் நீங்கள் ஊமைகளாகி விட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இப்படி ஒரு விரதத்தை கடைபிடித்தால் கலையுலகிலும் சரி, அரசியல் வட்டாரத்திலும் சரி மொத்தத்தில் பொது வாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்த வேண்டுமென்று கோவையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஸ்ணசாமி கலந்துகொண்டு பேசினார். இதில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்த தவறினால் ஒரு லட்சம் இளைஞர்களுடன் இலங்கையை நோக்கி பயணம் மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, 
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஐயம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. விழாவை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600-ற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப் பாய்ந்த காளைகள் முட்டித்தள்ளியதில் 67 பேர் காயமடைந்தனர்.

நிகழ்ச்சியின் இடையே பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டடிருந்த மேடை சரிந்து விழுந்தது. அதிலும் சிலர் காயமடைந்தனர். போட்டியி;ல் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.


மார்ச் 8 ஆம் தேதி நெல்லையில் உழைக்கும் மகளீர் மாநாடு நடத்தப்படுகிறது. இதுதொடர்பான தெண்மண்டல ஆலோசனைக் கூட்டம் மகளீர் அணி செயலாளர் நற்சோனை தலைமையில் நடைபெற்றது.

இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில் ஆர்வலன், ஆற்றலரசு, கலைவேந்தன், கனியமுதன், மோகன், செல்லையா பாண்டி, ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கே. டி.சி நகர் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் செல்லத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கா.கலைக்கோட்டுதயம் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.
தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாட்களை முன்னிட்டு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் சமய நல்லிணக்க விழா நடத்தப்பட்டது. இதில் சங்க தலைவர் ரவீந்திர தாஸ் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் கலை இலக்கிய போட்டிகள் மற்றும் மாறு வேடம் நடனம் உள்;ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் முகமது சகில் அக்தர் பத்திரிகையாளர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் சகாயராஜ் உட்பட எராளமானோர் பங்கேற்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்வெளியான அசல் திரைப்படத்தின் திருட்டு வீசிடிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் மதுரையில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

மீனாட்சி பஜார், ஆர்.எம்.எஸ் பஜார் உள்ளிட்ட இடங்களில் வீசிடிக்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையில் புகார் செய்தனர். இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ரசிகர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து திருட்;டு வீசிடிக்கள் விற்பனை செய்ததாக புதூரை சேர்ந்த அக்பர் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு;ள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சி காலத்தில் 149 கோடி ரூபாய் செலவில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் ஒப்பந்த புள்ளி நிலையிலேயே இருப்பதாக குறை கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் சேலம் மாநகராட்சியில் முறையான செயற்பாடுகள் இல்லை மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைக் கண்டித்தும் பாதாள சாக்கடைத் திட்டம் தனிக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சேலத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரத போராட்டம் கழக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையிலும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கோவையில் எல்.ஐ.சி .எஸ்.சி.எஸ்.டி பிரிவு ஊழியர் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் தலித் சமூக பொருளாதார விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தொல். திருமாவளவன் நீதிமன்றங்கள் தலித்துக்களுக்கு சாதகமாக தீர்பளித்தாலும் குடியிருப்புக்களை காலி செய்வதில் நிர்வாகங்கள் தலித்துக்களுக்கு எதிராக செயற்படுகிறது என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் கோட்டத்தலைவர் ஜெகநாதன், ஊழியர் நலச்சங்க தலைவர் அழகப்பன் கட்சியின் மாவட்ட செயலாளர் சுசிகலையரசன், மாநகர செயலாளர் தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கவிஞர் கனிமொழி கலந்துகொண்டு புத்தகத்தினை வெளியிட்டு பேசினார்.

அப்போது சுதந்திர போராட்டத்தை தாங்கள் தான் நடத்தினோம் என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது அனைத்து மதத்தினரின் பங்கும் அதில் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் தமிழன் என்ற அடையாளத்தை வென்றெடுக்க இன்னும் போராடித்தான் வருகிறோம் முதன் முதலாக தமிழ் உணர்வை ஊட்டிய இயக்கம்  திராவிட இயக்கம் என்றும் கூறினார். 

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று : 736 நேற்று: 4346 மொத்தம்: 8833815
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்