Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


ஜ.நா விசாரணைக் குழுவிற்கு மலேசியத் தமிழர்கள் வரவேற்பு - ஈஸ்வரலிங்கம்
  2010-06-26 02:31:39
ஜ.நா விசாரணைக் குழுவிற்கு மலேசியத் தமிழர்கள் வரவேற்பு - ஈஸ்வரலிங்கம்
இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும் அப்பாவித் தமிழர்கள் ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதும். சரணடைய வந்த விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்ததும் உலமறிந்த உண்மை சிங்கள அரசு போர் குற்றங்களே நடக்கவில்லையென மறுத்தபோதும். ஜ.நா அமைப்பு இலங்கை அரசு போர் தொடர்பான குற்றங்களை புரிந்த மனித உரிமைகளை மீறியதற்க்கான ஆதாரங்களைத் திரட்ட கடந்த வராம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது .

இலங்கை வன்னியில் போர் நடந்து ஓரு வருடத்துக்கு மேலான போதிலும், தடயங்களையும் ஆதரங்களையும் திரட்ட அமைக்கப்பட்ட இந்த மூவர் கொண்ட குழு வரவேற்புக்குறியது. ஜ.நா வின் இந்த முயற்சி உலகத் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் என மலேசியத் தமிழர்கள் தெரிவித்தாக மலேசிய உலகவிவகார மாமன்றத்தின் தலைவர் ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.

இக் குழு யாருடைய வற்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும். இடம் கொடுக்காமல் சுகந்திரமாக செயல்ப்பட்டு ஆதாரங்களைத் திரட்டி அறிக்கை சமர்ப்பித்து உலகச் சமுகத்திற்கு உண்மைகளை அறிவிக்க வேண்டும் என ஜ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஈஸ்வரலிங்கம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் 


கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   4 பேர் இன்று : 1224 நேற்று: 3140 மொத்தம்: 9506010
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்