காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் இன்றுமாலை திறந்துவைக்கிறார்.
2010-07-28 04:04:00
மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் நீர் திறந்துவிடுவது வழக்கம்! இந்தாண்டு போதிய நீர் இறுப்பு இல்லாததால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இன்றுமாலை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதன்படி இன்றுமாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்துகொண்டு அணையின் நீரை திறந்துவிடஉள்ளார். இதனால் டெல்டா பாசன விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.