Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils
advt
advt
advt



[பார்க்க]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 450 கோடி செலவில் புதிய சட்டப் பேரவை வளாகம் கட்டப்பட்டுள்ளது. நாளை மறுநாள் திறப்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்டப்பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.
உங்கள் கருத்து

[பார்க்க]
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும்;. 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கான ஜனநாயகத்தை உறுதி படுத்துவதாக அமையாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தாததும், ஐனநாயக விரோதப் போக்கு என்று கூறியுள்ள அவர், ஆட்சியாளர்கள் அன்றும், இன்றும் உள் ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய அனைத்து கட்சியினருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள அவர், 50 சதவீத இட ஒதுக்கீடையும், உள் ஒதுக்கீட்டையும் வென்றெடுக்க உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்து

[பார்க்க]
தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பென்னாகரம் தொகுதியில் கலவரத்தைத் தூண்டி போர்களமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டினார்.
தொகுதிக்குள் சட்ட விரோதமாக வெளியாட்கள் ஆயுதங்களுடன் நுழைந்து வருகிறார்கள். அதே வேளையில் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குப்போட்டு தேர்தல் பணிகள் முடக்கப்படுவதாகவும் குறை கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க தொகுதி நிலைக்குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உங்கள் கருத்து

[பார்க்க]
பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் மார்ச் மாதம் 27 – ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட 37 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அமுதா வெளியிட்டார். இதன்படி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இடைத் தேர்தலுக்கு தாக்கலான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடத்தப்படுகிறது. வேட்புமனுக்களை திறம்பப் பெற மார்ச் மாதம் 13 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து

[பார்க்க]
மின்சார துறையில் முழுமையான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத் தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.
இதில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பா.அமுதவன் வாழ்த்திப் பேசினார். சங்க நிர்வாகிகள் உத்திராடம், மூர்த்தி, ஆனந், வேல்முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்து

[பார்க்க]
இந்த விழாவில் ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் 84 சென்ட் நிலத்தை, பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் சேகரிடம், வால்பாறை வட்டாச்சியர் வழங்கினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரவேலு, காவல்துறை கண்காணிப்பாளர் மாடசாமி, துணை வட்டாட்சியர் கே.என் நேரு, நகராட்சி செயல் அலுவலர் ராஐகுமரன் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்து

[பார்க்க]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நகர தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் வாயி;ல் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒன்றய செயலாளர் முத்துராஜ், மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன், ஐயாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
உங்கள் கருத்து

[பார்க்க]
மதுரை புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ம.தி.மு.க வைச் சேர்ந்த மணி தலைமை தாங்கினார்.
இதில் மாநில செயலாளர் மகபூப்ஜான், மதுரை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், மாநில பொதுச் செயலாளர் துரைசாமி, லேபர் யூனியன் பார்ட்டியைச் சேர்ந்த ஐயாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
உங்கள் கருத்து

[பார்க்க]
விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின்; மவட்டச் செயலாளர் மங்காபிள்;ளை தலைமை தாங்கினர்.
இதில் மாநில பொருளாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்களுக்கு தனி பட்ஜெட் வழங்க வேண்டும். பஞ்சிமி நிலங்களை மீட்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
உங்கள் கருத்து

[பார்க்க]
கோவில்பட்டி தொடக்க கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் ஜேசுராஜன், பொருளாளர் கல்யாணராமன், மாநில பொருளாளர் முத்துப்பாண்டியன், மாநில துணை தலைவர் முத்துச்செல்வன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
உங்கள் கருத்து


கருத்துரை:

கருத்துரைகள் மொத்தம் :111. பக்கம்1 / 12.

arulmozhi   earulmozhi@hotmail.com

8:13 pm , 09-03-2010

very good updated news keepitup

Johncy   admin-india@ui2u.com

2:40 pm , 07-03-2010

Every saturday and sunday i used to watch your night news. Madam Debi and some other girl are reading. But You dont flash madam Debi's news in a proper way. And Begining and Finishing head news are always read by other girl. Why are you showing the f... மேலும்.. »

youvanesh   noneed

9:14 am , 25-02-2010

karuna "he is a tamil dog"

pe.chidambaram   pechid@gmail.com

1:12 am , 25-02-2010

very excellent

PAAVENDHAN.SOU   soupaa64@gmail.com

9:37 am , 21-02-2010

superum, altimettum - unmaiyana thalai- yin (thirumaa) eyacharikkai

deiva   maisjd

12:27 pm , 20-02-2010

deva ne pas parti ecole

senthil   usk8191@yahoomail.com.sg

11:54 pm , 31-01-2010

இந்தியா வெல்லும் கண்டிப்பாக.....

Mohamed Jakariya   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

8:17 am , 20-01-2010

Thank you vc parties

basha   haja_basha@yahoo.co.in

10:01 am , 09-01-2010

send all news

raja   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

7:21 am , 06-01-2010

East or West Dr Iyya is best


பக்கம்: -1-   2    3    4    5    6   

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   5 பேர் இன்று : 914 நேற்று: 4847 மொத்தம்: 8953591
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்