கோவில் பட்டியை சுற்றி உள்ள தோனுகால், லிங்கமபட்டி, மந்தித்தோப்பு கிராமங்களின் மலைப்பகுதிகளில் சரளை மண் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர், விவசாயம் பாதிக்கப்படுகிறது. சரளை மண் அள்ள அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோயெல், அழகுசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் விநாயகரமேஸ், கணேசன், ராசேந்திரன், எரிமலை வரதன், பால்ராஜ், நகர மன்ற உறுப்பினரகள் தெய்வேந்திரன் மற்றும் பெண்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.