Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
 
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பள்ளி கட்டணத்தை வரையறை செய்து அறிவிப்பு விடுத்த நிலையில் அதனை எதிர்த்து கல்வி கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி ஏராளனமான பள்ளிகள் மேல்முறையீடு செய்திருந்தன.
இந்நிலையில் நேற்று நீதிபதி கோவிந்தராஜன், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பள்ளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது என்றும், இதுகுறித்து புதிய கல்வி கட்டண நிர்ணயம் பற்றி முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். திருத்தப்பட்ட புதிய கல்வி கண்டனம் விரைவில் வெளியிடப்பட்டு அவை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும்.
இதனை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த கட்டண நிர்ணயம் இந்த ஆண்டுமுதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர் தொகைக்கு மேல் வசூலிக்கப்பட்ட கட்டணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் சட்டத்தை மீறி கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி கோவிந்தராஜன் தெரிவித்தார். 


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து வருவதற்காக இந்தியாவில் இருந்து சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கடந்த 17 – ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்து  பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகவும், அதில் இந்திய அரசால் அளிக்கப்பட்ட பங்களிப்பு பற்றியும், தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசு காட்டிவரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்; அந்த அதிகாரி இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் ஈழத்தமிழர்கள் பிரச்சிiனை குறித்து விவாதிப்பதோடு, அவர்களது புணர்வாழ்வு பணிகளையும் நேரில் பார்வையிடுவார் என்றும் அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங்  குறிப்பிட்டுள்ளார். 

 
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டிட நிதிவழங்கும் விழா மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்டுவதில்லை. மணல், அரிசி, கற்கள் மட்டுமின்றி இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் அதிகமாக உள்ள பகுதியில் வாழும் மக்களை அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதுடன் அவர்களின் எதிர்;ப்பை அடக்க கைது செய்தல்போன்ற அராஜக செயலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் இயற்கை வளங்களை அழிப்பதில் ஆளுங்கட்சி துணை நிற்கிறது என்று அவர், குற்றம் சாட்டியுள்ளார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட தலைவர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



 
நெடுஞ்சாலைத்துறையினரால் வசூலிக்கப்படும் சுங்கவரி, டீசல் மீதான வரி, விற்பனை வரி போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி தென்னிந்திய அளவில் வரும் 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தென் இந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதுகுறித்து நேற்று டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாமுழுவதும் வரும் 6 ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாமல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
5. நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் உள்ளனர். முக்கிய பொருளாதார உயர்வு நிலைக்கு அடிப்படையாக விளங்குவது தேயிலை விவசாயம்தான். கடந்த சில வருடங்களாக பசுந்தேயிலைக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இந்த விலை வீழ்ச்சிக்காரணமாக தேயிலை பறிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்களின் வாழ்க்கை சூழ்நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. ஆகவே பச்சைத் தேயிலை விலை பகிர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பச்சை தேயிலையை ரூபாய் 3 க்கு விற்கும்போது, அரசு மாநியம் வழங்க வேண்டும். ஒரு கிலோவிற்கு ரூபாய் 25 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோத்தகிரி காந்தி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட விவசாய கூட்டுக்குழுத் தலைவர் பெல்லி தலைமை தாங்கினார்;. ஆயிரக்கணக்கான தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   5 பேர் இன்று : 1171 நேற்று: 2532 மொத்தம்: 9383661
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்