Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வேட்பாளர் இன்பசேகரன், பா.ம.க. வேட்பாளர் தமிழ்குமரன், தே.மு.தி.க. வேட்பாளர் காவேரிவர்மன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் உட்பட இதுவரை 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் முறைகேடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தடுக்க அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை வீடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 டபுள்யூ.ஆர். வரதராஜன் பற்றிய செய்தியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். இந்த தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், மேற்கு வங்கத்தில் நடத்தி காட்டி வருகின்ற வன்முறையை, தமிழகத்திலும் அரங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
தவறாக செய்தி ஒளிபரப்பப்பட்டது என்று கருதினால் ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாம்.  அதைவிடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது மேலும் இருபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மோசடி மற்றும் மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்தியானந்தா மீதான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த கோவை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நித்தியானந்தா மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.
வேலூர் மாவட்டம் வடுகதாங்கல் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அமைச்சர் துரைமுருகன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினார். இதில் சுகாதார பணிகள் இயக்குனர் பிரேம்குமார், ஒன்றியகுழுத்தலைவர் சீத்தாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கைப்பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தத்துவ மைய மாநில செயலாளர் விடுதலை, குடந்தைஅரசன், இரா.கிட்டு, பெரம்பலூர் சித்தர், மன்னர் மன்னன், முருகய்யன், பொன்பாவாணன் உட்பட பலர் கலந்து கொண்டு விண்ணப்பப்படிவம் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

புத்தூர் உய்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவிலின் திருவிழா கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு பலி கொடுத்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினார்.

தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் விற்பனையாகும் வண்டி ஒன்றுக்கு தற்காலிக அனுமதி பதிவு பெற்றுத்தர ஆயிரம் ரூபாய் வீதம் ரூபாய் 10 ஆயிரம் கேட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இதனை விஜிலென்ஸ் தலைவர் டி.எஸ்.பி. சண்முகப்பிரியா உத்தரவின்பேரி;ல் போலீசார் மறைந்திருந்து பிடித்தனர். இதில்; போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரசிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில், அரன்மணை  முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஜியாவுதின் தலைமையில் ஜமால், கருணாகரன். அப்துல்அமீது, காலித், சையது இப்ராஹீம், உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பண்ருட்டியில் மாவட்ட தலைவர் சவ்கத்அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இதயதுல்லா, நூருல்அமின், முகமது இக்பால் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் சி.ஐ.டி.யூ.சி. மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சிகளின் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, முத்துச்சாமி, அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 19 பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மீனாட்சி பஜாரில் மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேல்குடியினருக்கு மட்டும் மத்திய – மாநில அரசுகள் சலுகைகள் தருகின்றன.
அடித்தட்டு மக்களுக்கு எந்த வித சலுகைகளையும் செய்யாமல் புறக்கணித்து வருவதாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்;பாட்டத்தில் முகமதுஅப்பாஸ். துணை தலைவர் ஜவருல்லாகான், பொருளாளர் ஏ.எம்.கான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலித் கிறிஸ்துவ தமிழக ஆயர்குழுவின் சார்பில், மயிலை பேராயர் சின்னப்பா தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது தலித் கிறிஸ்துவ மக்களை எஸ்.சி, எஸ்.டி. பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் பாண்டிச்சேரி பேராயர் அனந்தராஜன், மதுரை பீட்டர்பெர்னாண்டோ, சேலம் சிங்கராயர், கோவை தாமஸ் அகஸ்டின், வேலூர் பேராயர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகைபுரிந்த பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக  பணிமனையின் முன்பு கட்சிக்கொடி யினை ஏற்றிவைத்தார்.

பின்னர் தொழிலாளர் விடுதலை முன்னிணியின் கிளைச்செயலாளர் கருணாநிதி - உஷா தம்பதியரின் குழந்தைகள் மோனிஷாராய், சுஸ்மிதாராய், ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் காதணிவிழாவில் கலந்துகொண்டார்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நகரசெயலாளர் லயன் அசோக் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணையா, ஆசிரியர் அணி மாநிலச் செயலாளர் கான்சன்டென் உட்பட ஏராளமான தே.மு.தி.க.வினர் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பல்லாவரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்  மாட்டுவண்டியை முன்நிறுத்தி நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அனகை முருகேசன், ஏற்கனவே பன்மடங்கு உயர்ந்திருக்கும் விலைவாசி உயர்வால் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்கவே;ணடும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக யாகங்கள் வார்த்து வேத விற்பன்னர்களை கொண்டு பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து  இன்றுகாலை ஜெயரிஷிகாளிதாஸ் ஸ்வாமிகள் மற்றும் ஆலய நிர்வாகிகள் குழு முன்னிலையில் ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் ஆலய கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.  இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஸ்வாமியின் அருளாசிபெற்றனர். இந்நிகழ்ச்சியின்போது 2 ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்; பச்சிளங்குழந்தையை கடத்திச் சென்று ஆஸ்திரேலிய இனவெறியர்கள் படுகொலை செய்துள்ளனர்.

குர்ஷன்சிங் என்ற மூன்றுவயது குழந்தையின் சடலம் மெல்போர்;ன் நகரில் கண்டெடுக்கப்படுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தகவல் தெரிவித்ததோடு ஆஸ்திரேலிய அரசுக்கு, தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்தும், தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

1.சென்னை பாரிமுனை குறளகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ.சங்க மாநிலச் செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச்செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல்-டீசல் விலைஉயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டதால், அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

2.செங்கற்பட்டு மின்சாரவாரியம் எஸ்.இ. அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

3.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் ரசாக், மாவட்ட செயலாளர் ஜீவா, மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆண்களும் பெண்களுமாக திரளானோர் பங்கேற்றனர்.
அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய – மாநில அரசு களை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

4.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ..டி.யூ. மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கைதாயினர்.
5.பண்ருட்டி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ.மாவட்டப் பொருளாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மாவட்டத் துணைச் செயலாளர் துரை, மாவட்ட துணைத் தலைவர் மணிவாசகம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

6.புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் சண்முகம், செல்வராஜ், தர்மராஜ் உட்பட திரளானோர் கைதுசெய்யப் பட்டனர்.
7.புதுவை மாநிலம் பாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் நிலவழகன், ராமமூர்த்தி, கலியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

8.கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு கட்டுமான கட்டிடச்சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒன்றியச் செயலாளர் சத்யா உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை அரசு பொதுமருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இதில் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வம், தலைமைநிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, மாவட்டச்  செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, பாலசிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் என ஏராளமான விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டதின்போது, பெட்ரோல்-டீசல் மீதான விலைஉயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது பொருளாதார நெருக்கடியில் அமெரிக்காவும் இதர ஐரோப்பிய நாடுகளும் சிக்கித் தவித்த நிலையில் இந்தியா அந்த நெருக்கடியை திறமையுடன் சமாளித்தது. இதன் விளைவாக பொருளாதாரத்துறையில் எட்டு புள்ளி ஒன்பது சதவீத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். 

விலைவாசி உயர்வுகள் கவலையளிப்பதாக தெரிவித்த மன்மோகன்சிங், அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக கூறினார்.  மேலும் நமது பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தலைமையில் நடந்த கலந்துரையாடலில் அவர் தெரிவித்ததாவது: நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 2002 ஆம் ஆண்டு டிசம்பரில்  இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  திருகோணமலையிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.


ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம். புதிய எம்பிக்களே இறுதி முடிவை எடுப்பர். உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமையவேண்டும் என ஒஸ்லோ பிரகடனம் கூறுகிறது. ஒஸ்லோ பிரகடனம் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் தயாரிக்கப்பட்டபோது அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருநாடுகள் ஒரு தேசம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் அமையவேண்டும் என கூறினார். இந்தக்கட்டத்தில்தான் கூட்டமைப்புக்குள் முரண்பாடு ஏற்பட்டது.

வட்டுக்கோட்டை பிரகடனம், திம்பு பிரகடனம், மங்கள முனசிங்க அறிக்கை, இலங்கை இந்திய உடன்படிக்கை மற்றும் சந்திரிகா முன்வைத்த தீர்வுத் திட்டம் ஆகியன இருதரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளபடாதவை. ஒருபக்கச்சார்பானவை. ஆனால் டிசம்பர் 2002 ல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம்  இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையிலேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் தயாரித்து வைத்திருக்கின்றது. என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் வருடாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை ஜெனிவாவில் நடந்தது. அதில் அறிக்கை தயாரித்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை போரின்போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி உள்ளார். இலங்கை அரசு பலவழிகளிலும் நடத்தியுள்ள போர்க்குற்றங்களை முழுமையாக விசாரணை செய்யவேண்டும் என தாம் உறுதியாக உள்ளதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் உதவிகரமானதாக இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடக்கவுள்ள தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ள மனித உரிமைகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஜீவ விஜேசிங்க, போர்க் குற்றங்கள் குறித்த இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். ஆனால், போர் முடிவுக்கு வந்ததும் கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற ஐ.நா.சபையின் மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு அமர்வில்இ தனது அரசுக்கு எதிரான போர்க்குற்ற விமர்சனங்களை இல்லாததாக்கும் வகையில் இலங்கை தனது சொந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அதில் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியை போற்றும் வகையில் தனது தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
37 வயதாகும் முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய ஓய்வு திட்டத்தை அறிவித்து இருக்கிறார். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், 2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னமும் 8 விக்கெட்டுகள் உள்ளன. உலக கோப்பை வரை விளையாடுவதே தன்னுடைய நோக்கம் என முரளி தரன் கூறியுள்ளார். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வன்னி அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் ஆட்டோ மீது கற்களை வீசினார். உடனே போலீசார் அவரை பிடித்தனர். ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் அவரை தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் காப்பாற்றும் முயற்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில போலீஸ்காரர்களும் கீழே விழுந்தனர்.
3 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 12 ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. கடந்த முறை போலவே இந்த தடவையும், ஆட்டத்தின் போது அணிகள் வியூகம் வகுப்பதற்காக தலா இரண்டரை நிமிடங்கள் வீதம் இரண்டு இடைவேளை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது இடைவேளையை பீல்டிங் செய்யும் அணி தேர்வு செய்யும். அவர்கள் 6 முதல் 8 வது ஓவருக்குள் இதனை எடுத்துக் கொள்ளலாம். 2 வது இடைவேளை நேரத்தை பேட்டிங் செய்யும் அணி தேர்வு செய்யும். 11 முதல் 16 வது ஓவருக்குள் இந்த இடைவேளை அமலாகும்.

பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் அணிகள் தங்களது ஆட்ட வியுக முறைகளை மீண்டும் ஆலோசிக்க இந்த இடைவேளை உதவும். அந்த சமயத்தில் வீரர்கள் யாரும் மைதானத்திற்கு வெளியே போக மாட்டார்கள். மைதானத்தின் மிடில்பகுதியில் கூடி ஆலோசிப்பார்கள்' என்று ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர்கள்  குண்டர்கள் இன்று காலையில் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றுள்ள இந்த வன்முறை வெறியாட்டத்தில் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் விலை உயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு ஒளிப்பதிவாளர்களும், பெண் ஊழியர்கள் உள்பட பல அலுவலக ஊழியர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய வெறியாட்டத்தில் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
 
பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து மற்ற எல்லோரையும்விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மிக அதிகமாக பேசி வருபவர்கள். அப்படி பேசி வருபவர்கள் அதற்கு மாறாக இன்று சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கி நொறுக்கி இருப்பதன் மூலம் உண்மையில் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.
 
மேற்கு வங்கத்தில் நடத்திக்காட்டி வருகிற வன்முறை கலாச்சாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றி இருக்கிறார்கள். ஊருக்குத்தான் உபதேசம் தங்களுக்கு இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை காட்ட மறுப்பு அறிக்கை வெளியிடலாம். சம்பந்தப்பட்ட ஒரு செய்தி வெளியிடப்பட்டதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மக்கள் தொலைக்காட்சியுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுப்பு அறிக்கை வெளியிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்.
 
 
மறுப்பு அறிக்கை வெளியிட்டால் அதனை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக மக்கள் தொலைக்காட்சியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்களது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கருத்து சுதந்திரத்திலும், பத்திரிகை சுதந்திரத்திலும் நம்பிக்கை உடைய அனைத்து கட்சியினரும், அனைத்து அமைப்பினரும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிக்க முன் வரவேண்டும்.
 
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களைப்படுகாயப்படுத்தி அலுவலகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது குறிப்பாக இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய அதன் நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொலைக் காட்சி அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பு அளிக்க காவல்துறை முன்வரவேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள யதா மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் அருகே தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் வரையிலான பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள் இந்த சூட்டு சம்பவத்தால் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வளாகத்துக்குள் நுழைந்த ஒருவரை சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினார். இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவரும் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. 

பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்து வாழும் இடம், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் டேனர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பின்லேடன் மறைவிடம் தெரிந்தும், அதை ஐ.எஸ்.ஐ. ரகசியமாக வைத்துள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கத்தை பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால்தான், அமெரிக்கா மீது செல்வாக்கு செலுத்துவதற்காக இப்படி நடந்துகொள்கிறது என்று கூறினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வருகிற 27- ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று தி.மு,க. வேட்பாளர் இன்பசேகரன் ,தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எதிர்வரும் வாரத்தில் அவசரகால சட்ட நீட்டிப்புக்காக நாடாளுமன்றம் கூட்டப்படும் போது, தமது கட்சி  அவசரக்கால சட்டநீடிப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.  கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும், அவசரகால சட்ட நீட்டிப்புக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க முற்படுவதாக அவர் குற்றம்  சுமத்தியுள்ளார். இதேவேளை அவசரகாலச்சட்ட நீடிப்பு வாக்கெடுப்பின் போது தாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. அவசரகால சட்ட நீடிப்பதற்காக பாராளுமன்றம் எதிர்வரும் 9ம் திகதி  கூட்டப்படவுள்ளது. இதற்கான வர்த்தமான அறிவித்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் மற்றும் மாளவஞ்சேரியை சேர்ந்தவர்கள் பாபு, அஜிஸ். இவர்கள் 2 பேரும் சினிமா தொடர்புடையவர்கள். இதனால் அங்குள்ள உள்ளூர் டி.வி.க்கள் மற்றும் பத்திரிகைகளில் சினிமாவில் நடிக்க பெண்கள் தேவை என்று அடிக்கடி விளம்பரம் கொடுப்பார்கள். அதனை பார்த்து தங்களை நாடி வரும் பெண்களிடம் அவர்களிடம் பயோடேட்டா மற்றும் ரூ.300 பணம் ஆகியவற்றை பெற்றுக்கொள்வார்கள்.  

அதன்பின்பு பெண்களை குன்னங்குளம் பகுதியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று புளுபிலிம் எடுத்துள்ளனர். இவர்களின் முறை கேடான நடவடிக்கை தெரியாமல் பல பெண்கள் பாபு, அஜிசிடம் மாட்டியுள்ளனர். சினிமா ஆசையில் அவ்வாறு வரும் பெண்களிடம் தவறாக நடந்து ஆபாச பட சி.டி.க்கள் தயார் செய்த 2 பேரையும் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் செய்தார். அந்த பெண்ணிடம் 2 பேரும் பணம் மற்றும் 3 பவுன் நகையை பறித்து கொண்டு ஆபாச படம் எடுக்க முயன்ற போது அவர்களின் பிடியில் இருந்து தப்பிய அப்பெண் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக குன்னங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபு, அஜிஸ் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், பெண்களிடம் பறித்த நகை ஆகியவற்றை கைப்பற்றினர். 

திருச்சூர் அருகேயுள்ள கொடுங்கலூரை சேர்ந்தவர் கல்யாணி இவரது மகன் சஜீவன் (25).  இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாய்-மகனுக்கு வேண்டிய சாப்பாடு மற்றும் உதவிகளை உறவினர்கள் கவனித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சஜீவன் தனது தாயாரை அழைத்தார். வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்ட அவர் என்னை இந்த கொடுவாளால் வெட்டு என்று அங்கு கிடந்த கொடுவாளை எடுத்துக் கொடுத்தார். கல்யாணியும் மகன் சொன்னதுபோல் அவரது கழுத்தில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
 
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கொடுங்கலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவகி மற்றும் போலீசார் விரைந்து வந்து கல்யாணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சஜீவன் தான் வெட்ட சொன்னான், வெட்டினேன் என்று திரும்பத்திரும்ப அதையே கூறினார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர். சஜீவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற மகனையே கொலை செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் இருந்த கல்யாணியின் நிலையை எண்ணி பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
கோவை சட்டகல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் நவீன்குமார். இந்த மாணவன் மருதமலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதே கல்லூரியை சேர்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் அவரை ராகிங் செய்துள்ளனர்.

இதனையடுத்து மாணவன் நவீன் குமார், சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாகவும் ; இரும்பு ராட் மற்றும் ஹாக்கி மட்டை ‌கொண்டு தாக்கியதாகவும் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் கல்லூரியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க சட்டக்கல்லூரி வளாகத்தில் பேரூர் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்தன. இந்நிலையில் வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.
 
நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.
சென்னை தியாகராயநகரில் ராமானுஜர் மிஷன் அறக்கட்டளையை நடத்தி வந்தவர் சதுர்வேதி என்கிற பிரசன்ன வெங்கட சரவண சதுர்வேதி. இவரது அறக்கட்டளைக்கு பக்தர்கள் பலர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரியாக பணியாற்றிய சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் மகளை 2000-ம் ஆண்டில் சதுர்வேதி சாமியார் மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும், அக்டோபர் 2.2.2002 அன்று ரூ.5 லட்சமும், 2003-ம் ஆண்டு ரூ.7 லட்சமும் மிரட்டி வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சுரேஷ் கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சதுர்வேதி சாமியார், ஸ்ரீபதி, ஸ்ரீதர், பாலு, மனோகரன், அனந்தகிருஷ்ணன், தாமோதரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட்டு விசாரித்து வருகிறது. 2005-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் நடந்த விசாரணையின்போது சாமியார் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் மனுக்களை அவர் சார்பில் வக்கீல்கள் தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் சதுர்வேதி ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக, அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிபதி ஏற்காமல் தள்ளுபடி செய்தார். மேலும், சதுர்வேதி சாமியாருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கொலைகளும் நடந்துள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டீபன் ஸ்மித் இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை ஒடுக்க தனது அரசு  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அடிக்கடி வாந்தி எடுத்ததால், இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் இன்று அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
டெல்லியில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்போது தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணிக்கொடை உச்சவரம்புத் தொகையான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு மத்திய மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று மந்திரிசபை இந்த ஒப்புதலை அளித்துள்ளது எனவும், இந்த தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும், மத்திய தொழிலாளர் மந்திரி மல்லிகார்ஜூன் கார்கே நிருபர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வளாகத்துக்குள் நுழைந்த ஒருவரை சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினார். இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவரும் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. சிபான்டா 95 ரன்களும், தைபு 56 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சந்தர்பால் 70 ரன்களும், கெயிலே 57 ரன்களும் எடுத்தனர்.
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   5 பேர் இன்று : 915 நேற்று: 4847 மொத்தம்: 8953592
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்