 |
|
தமிழக சட்டப்பேரவை சரித்திரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் கருணாநிதி பணியாற்றியுள்ளார். அவருக்கு சட்டப்பேரவை வளாகங்களில் உருவப்படம் திறப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்மொழிந்தார். நிதியமைச்சர் க.அன்பழகன் வழிமொழிய தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 13 ஆம் தேதி திறப்பு விழா நடத்தப்படுகிறது. இதையடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
|
 |
|
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உதவி மேலாளர் பணிகளுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. 13 பேருக்கு நியமன ஆணைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் தொழியலாளர் துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணியாற்ற 324 பேருக்கு பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
|
 |
|
நித்தியானந்தா தொடர்பான ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க ஆசிரம நிர்வாகி நித்திய ஆத்ம பரமானாந்தா மற்றும் அவரது வழக்கறிஞர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வீடியோவில் இருப்பது நித்தியானந்தா அல்ல. அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும், சுவாமி நேரில் தோன்றி விளக்கம் அளிப்பார் என்றும் அவர்கள் கூறினர். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு சரமாறியான குற்றச்சாட்டுகளை தொடுத்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அவர்கள் பாதியிலேயே சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
|
 |
|
சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்கிறார்கள். இதில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தப்படுகிறது.
|
 |
|
கடந்த மாதம் கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த குமார் என்பவரது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடிவந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதான கோபால் என்பவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
|
 |
|
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, கண்ணபிரான், ராஜ்குமார். இவர்கள் 3 பேரும் பெயிண்ட்டராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வேலை முடித்து வீடு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. இதில் ராஜா, ராஜ்குமார், ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
|
 |
|
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் பாவாணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாநில துணை செயலாளர்கள் தமிழ்மாறன், ஆற்றலரசு, பால்வண்ணன், ராமலிங்கம், செந்தமிழரசு, தமிழ் செழியன், கருப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
|
 |
|
மதுரை புதூர் பகுதியில் பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு நடைபெறும் சட்டவிரோதப் போக்கினை கண்டித்தும், லஞ்சம் வாங்குவதை கண்டித்தும், மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களை காவலாளி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை உருவானது.
|
 |
|
மதுரை வடக்குமாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு நகர் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார். இதில் அமைப்புச் செயலாளர் ஆற்றலரசு, மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கதிரவன், நல்லசாமி, மணியரசு, ராம்குமார், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். |
 |
|
மையத்தை திறந்துவைத்து பேசிய மேயர் மா.சுப்பிரமணியன், இன்றுமுதல் தொடர்ந்து இருபத்து நான்குமணிநேரம் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும், பதினான்கு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். விழாவில் துணைமேயர் சத்தியபாமா, மாமன்ற உறுப்பினர் ஏகப்பன், மண்டல உறுப்பினர் பாலகிருஷ்ணன், டாக்டர் சாருமதி, புவநாதன், குடும்பநல இயக்குனர் வித்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
செங்குன்றம் வடகரையைச் சேர்ந்தவர்கள் சாமிநாதன், பன்னீர்செல்வம், குமரேசன். இவர்கள் நேற்றிரவு செங்குன்றம் புறவழிசாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே மரங்கள் ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி எதிர்பாராதவிதமாக இருச்சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சாமிநாதன், பன்னீர்செல்வம், குமரேசன் ஆகியோர் பலியானார்கள். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்களை தடுப்பதற்கு புதிய பாலம் அமைக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
 |
|
விருதுநகர் - ஆத்தூருக்கு இடையே சூளகரை என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இந்த விரிசலை கண்டுபிடித்து பழுதுபார்த்தனர். இதனால் இவ்வழியாக செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் பலமணிநேரம் தாமதமாக சென்றன. ரயில்வே ஊழியர்கள் உரியநேரத்தில் விரிசலை சரிசெய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
|
 |
|
ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தமிழரசி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்;குதல், மயான பாதை அமைத்தல், கல்வி உதவித்தொகை வழங்குதல், ஆதிதிராவிட நலவிடுதிகளை பராமரித்தல் உள்ளிட்ட நலத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆறுமாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நல அலுவலர் களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழரசி, கடந்த நான்காண்டுகளில் ரூபாய் இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தொன்பது கோடிவரை கல்வி சார்ந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
|
 |
|
காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ரவிராஜன் தலைமை தாங்கினார். இதில் நகரத் தலைவர் மணிகண்டன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் உட்பட கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
|
 |
|
பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் ரோவர் நிறுவன மேலாண் தலைவர் டாக்டர் வரதராஜன், என்.சி.இ.ஆர்.டி.சார்பில் டாக்டர் வெங்கடேசன், ஐ.ஏ.எஸ்.ஆய்வு மையம் சார்பில் டாக்டர் தங்ககணேசன், பாஸ்கரன், ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிவில் சர்வீஸஸ் தேர்வு குறித்து விளக்கவுரையாற்றினர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ- மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
|
 |
|
இது தொடர்பாக கடலூரில் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அனைத்து சாமியார் மடங்களையும் அரசு கைப்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பேட்டியின்போது மாவட்ட செய்தி தொடர்பாளர் நெடுமாறன், ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார், பன்னிர்செல்வம், ஆற்றலரசு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இராவணன், தமிழ்நிலவன் ஆகியோர் உடனிருந்தனர்.
|
 |
|
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விலைவாசியை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று கண்டித்துள்ளார்.
அத்தியாவசய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.சார்பில் 52 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. வடசென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அவை தலைவர் மதுசூதுதனன் தலைமை தாங்குகிறார். |
 |
|
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் பெல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு துணை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்டாலின் உட்பட ஏராளமான மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
|
 |
|
மாங்காடு மீனாட்சி கல்லூரி மாணவர்கள், போதுமான ஆசிரியர்கள் மற்றும் உரிய லேப் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து கல்லூரி நிர்வாகத்துடன் மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி கதவு மற்றும் சன்னல்களை அடித்து நொறுக்கினர். இதனால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. |
 |
|
கரூரை அடுத்த ஏழுர், தான்தோன்றி, உப்பிடமங்கலம் உள்ளிட்ட 6 கிராமங்களில் சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் கொண்ட விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் புறவழிச்சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
|
 |
|
மேலபாட்ட கரிசல்குளம் பகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் தெற்கு வெங்கய்ய நல்லூர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் நாட்டாமை நீரத்தலிங்கம் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில துணை பொதுச் செயலாளர் லட்சுமணன், தமிழ்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர்.
|
 |
|
மதுரை வடக்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்;த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவா, பிரீத்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோசம் எழுப்பப்பட்டது. |
 |
|
குடிசையில்லா வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்றும் உன்னத திட்டத் தொடக்கவிழா திருச்சி மாநகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், எத்தனையோ திட்டங்களை ஒப்படைத்து, அதனை சிறப்பாக உள்ளாட்சித்துறை செய்து முடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். மேலும் இந்த உன்னதமான கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை உள்ளாட்சித் துறையிடம் ஒப்படைத்து, பணியாற்ற வாய்ப்பளித்ததை தாம், பெரும்பேறாக கருதுவதாக தெரிவித்தார். |
 |
|
தமிழக அரசின் சார்பில் கலைஞர் வீட்டுவசதி திட்ட தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது. இதி;ல் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அரசு திட்டங்களை எதிர்கட்சியினர் அப்படியே ஒப்புக் கொள்ளக் கூடாது. ஏதாவது ஒரு குற்றத்துடன் ஒப்புக் கொள்ள வேயண்டும் அப்போதுதான் குறைகளை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
ஊனமுற்றோர் நலன் கருதி உன்னத திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும், அவர்களை மாற்றுத்திறனுடையோர் என்று அழைத்து நல்ல காரியங்களை செய்ய இருப்பதாகவும், முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இந்தவிழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கைதுசெய்தது, அவருடன் முன்விரோதமாக இருந்த மேஜர் ஜெனரல் மானவடு. முன்னாள் ராணுவத் தளபதி என்றுகூட மதிப்பளிக்காமல் சரத்தை மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசி, இழுத்துச் சென்றதால் மானவடுவின் செய்கை முரண்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது. சரத் பொன்சேகாவின் கைதில் ஈடுபட்ட ராணுவத்தினரிடன் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் நடத்திவரும் நிலையில் அடுத்ததாக மானவடுவே விசாரணைகளுக்கு உள்ளாக இருந்தார். ஆனால் அவரோ தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று நாட்டைவிட்டே வெளியேறியுள்ளார்.
மானவடு சரத் பொன்சேகாவைக் கைதுசெய்த விதம் குறித்து ராணுவத்திலுள்ள பலரும் தமது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனராம். சில சிரேஷ்ட அதிகாரிகள் வெளிப்படையாகவே அவரின் நடத்தைபற்றி, தூற்றுவதற்குப் பெயர்போன உடுகம்பொலவையே மானவடு மிஞ்சிவிட்டார் எனக் கூறியிருந்தனராம். இதையடுத்து, மானவடு ராணுவ மற்றும் பொது மக்களைச் சந்திப்பதையே தவிர்த்துவந்தார். இப்போது இவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சிப்பாய்களும் மிகவும் பின்வாங்குவதால் அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், இதற்கு ஜனாதிபதிச் செயலாளர் உதவிபுரிந்ததாகவும் தெரியவந்துள்ளது. |
 |
|
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் பேசுகையில் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களான அதிகாரப்பகிர்வு, தமிழர்களுக்கான சமஉரிமை, மொழி தொடர்பான பிரச்சினை, கலாசாரம் தொடர்பான பிரச்சினை, சமயம் தொடர்பான பிரச்சினை மற்றும் அபிவிருத்திகள் என்பன இன்னும் தீர்க்கப்படவில்லை. கடந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த சுமார் 6 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிலும் 2 லட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கோ, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கோ வாக்களிக்கவில்லை. இலங்கையில் 50 வீதமான யுத்தம் நிறைவடைந்த போதிலும், யுத்தத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமலிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுதும்பர தொகுதி அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
|
 |
|
ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார். தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. சுவாமி நித்யானந்தாவுடன் படுக்கையறையில் ரஞ்சிதா இருப்பது போல் வெளியான வீடியோ படக்காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
|
 |
|
கிரிக்கெட் உலகில் தெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர். ஆனால் கவாஸ்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் கேரி சோபர்ஸ் கூறியுள்ளார். அவர் மேலும், தெரிவிக்கையில் ''என்னை பொறுத்த வரை கவாஸ்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன். 1971-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் அறிமுகம் ஆனார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், காலின் பிரஸ்ட், ஜோல் கார்னர் ஆகியோரின் அனல் பறக்கும் பந்து வீச்சை சமாளித்து ஆடினார். ரிச்சர்ட்ஸ், லாரா, தெண்டுல்கரை விட கவாஸ்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன். மற்றவர்களுக்கு சிறந்த பேட்ஸ்மேன் வேறு யாராகவும் இருக்கலாம். என்னை பொறுத்தவரை கவாஸ்கர் தான் சிறந்த வீரர்.
|
 |
|
உத்தரபிரதேச மாநிலம் உன்னாப் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்த அகமதுகான் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்பட 37 வழக்குகள் உ.பி. மாநிலத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. இவரை உ.பி. போலீசார் 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்தநிலையில், சென்னையில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உ.பி. போலீசார் சென்னை புறநகர் போலீசார் உதவியுடன் அகமதுகானை கைது செய்தனர். |
 |
|
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டம் மிர்மொகலா என்ற இடத்தில் ஒரு வீட்டுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே ராணுவ வீரர்கள் விரைந்து சென்று அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இரு தரப்புக்கும் இடையே நேற்று தொடங்கிய துப்பாக்கி சண்டை இன்றும் நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
|
 |
|
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்காரில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இன்று நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலின் வாசல் கதவு திடீரென இடிந்து விழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிர் இழந்தனர் என தகவல் வெளியானது. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
|
 |
|
ராமராஜனுடன் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதா, தொடர்ந்து தமிழச்சி, தம்பி, அம்முவாகிய நான் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் நித்தியானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்தார். நித்தியானந்தாவை பார்த்ததுமே அவர் காலில் விழுந்து வணங்கினார். அவருடைய மைசூர் ஆசிரமத்தில் சேர்ந்து சன்னியாசியாகவும் ஆனார்.
தனது பெயரையும் சுவாமி நிர்மலானந்தா என்று மாற்றிக்கொண்டார். சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்கள் யோகா கற்றுக்கொடுத்துவந்தார். இவர்தான் பல நடிகைகளை நித்தியானந்தாவிற்கு அறிமுகப்படுத்தினார் என்று அந்த நடிகைகளை பற்றி பட்டியலே போடுகிறார்கள்.
|
 |
|
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சமர்காண்ட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அந்த பகுதியை ராணுவத்தினர் மீட்டனர்.
|
 |
|
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பிரதேசங்களில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாகக்கூறி அரசாங்கம் சிங்கள மக்களையும் கடற்படை, இராணுவ முகாம்களையும் அமைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நாடுகளும் சர்வதேசமும் இதனை கண்டித்து இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் அப்பகுதி மக்கள் அகதிகளாக வேறு மாவட்டங்களில் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினரை மீள்குடியேற்றி விட்டதாக தெரிவிக்கும் அரசாங்கம் அப்பகுதியில் 400 ஏக்கர் காணியில் ஆயிரம் கடற்படை வீரர்களுக்கான வீட்டுத் திட்டமொன்றையும் பாரிய கடற்படை முகாமையும் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
தற்போது இங்கு கடற்படை முகாம் வீடு கட்டுவதற்கான பொருட்களை பாரிய வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி வருவதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இதே மாதிரியான திட்டத்தை முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியிலும் செயற்படுத்தியுள்ளது. என குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசு வெளியுலகத்தை ஏமாற்றி இந்த செயல்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். |
 |
|
அனுராதபுர நகருக்கு அருகாமையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடயைமாற்றிய இராணுவ வீரரே இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளார். குறித்த நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதவான் தர்சிக்கா விமலசிறி தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் வேறும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
 |
|
பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்படும் முறுகல்நிலையை பயன்படுத்தி திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப் பெற்று மேலதிக ஆசனத்துடன் இரண்டு பேரை வெற்றி பெறச் செய்ய அரசாங்கம் ஏற்கனவே கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
|
 |
|
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பென்னாகரம் உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்த ஏ.நூர்முகமது, கோவை மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக உள்ளார். முன்னாள் கவுன்சிலரான இவர் பல்வேறு தேர்தல்கள் உள்பட இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். தற்போது 51-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று இவர் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது 2 கழுதைகளையும் உடன் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
|
 |
|
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரன் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறோம். பா.ம.க.வினர் அந்த தொகுதியிலே முகாமிட்டு உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்கள். பென்னாகரத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது அனைவரின் எண்ணம் ஆகும். அந்த எண்ணம் தான் எங்களது எண்ணமும் ஆகும். அப்படி அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் பா.ம.க. வெற்றி பெற்று விடும்.
பென்னாகரம் தொகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இது பற்றி நான் சென்னையில் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் நேரில் புகார் செய்தேன். என்றார். |
 |
|
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளகஸ்தி அடுத்த வரதய்ய பாளையம் விட்டலாய பாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படும் விஜயவாடாவைச் சேர்ந்த நாராயணா என்பவர் நேற்று முன்தினம் தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், கல்கி ஆசிரமத்தில் முக்தி, மகா தீட்சை என்ற பெயரில் பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்று மோசடி நடப்பதாகவும், கல்கி பகவானை நம்பி தான் ரூ.12 லட்ச ரூபாயை இழந்து விட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
அத்துடன் இந்த மோசடி பற்றி மாநில அரசு விசாரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் போதைப் பொருள் கலந்த லேகியம் வழங்கப்படுகிறது. அதை உண்ணும் பக்தர்கள் விசித்திரமாக நடந்துகொள்கின்றனர். பலர் இதற்கு அடிமையாகி ஆசிரமே கதி என்று கிடக்கின்றனர். பலர் மனநிலை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகி வருகின்றனர். இந்த ஆசிரமத்துக்கு நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் இளைஞர்கள் பக்தர்களாக உள்ளனர். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கவே மனித உரிமை கமிஷனை நாடி இருக்கிறோம் என்றார்.
ஆனால் இந்த புகாரை மறுத்த கல்கி ஆசிரம நிர்வாகி லோகேஷ் தாதாஜி, ஆசிரமத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றார். |
 |
|
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் அலுவலகத்தில் உள்ள குளிர் சாதன எந்திரத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டதால் தீப்பிடித்தது. இதனால் அங்குள்ள சில மரச்சாமான்கள் சேதம் அடைந்ததோடு, சில கோப்புகள் எரிந்து நாசமாயின. சுமார் 1 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து நடந்தபோது அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் அங்கு இல்லை.
|
 |
|
தைவானின் தெற்கு பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கினர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
|
 |
|
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ அதிகாரி ரித்தீஷ் ராய் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
|
 |
|
சிலியில் கடந்த 4 நாட்களுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சிலியின் மத்திய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.
|
|